சூரரை போற்று பொம்மைக்கு என்ன ஆச்சு..?! மருத்துவமனையில் சீரியஸான நிலையில் இருக்கிறாரா.?!
What happened to abarna balamurali
தமிழில் 8தோட்டக்கள் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை அபர்ணா பாலமுரளி. இருப்பினும் அப்போதெல்லாம் அடையாளம் தெரியாத அவர் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படத்தில் நடித்த சுந்தரி கதா பாத்திரத்தின் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார். அதன் பின்னர் அவருக்கு நிறைய ரசிகர்கள் கிடைத்தனர்.
இத்தகைய நிலையில் அபர்ணா பாலமுரளி பற்றி ஒரு வதந்தி பரவி வரும் நிலையில் அதுகுறித்து அபர்ணா பாலமுரளி பதிவிட்டு விளக்கம் அளித்துள்ளார். நடிகை அபர்ணா பாலமுரளி உடல்நிலை குன்றிய நிலையில் இருப்பதாகவும் தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வதந்திகள் பரவியது.
இந்த வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். இதுபோன்ற வதந்திகள் பரப்புவதை நிறுத்தி விடுங்கள் என்று அபர்ணா பாலமுரளி ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார். தான் நலமுடன் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் இந்த வதந்திகளை பார்த்து பயப்பட வேண்டாம் என்று கூறி சமீபத்தில் தான் சென்ற ட்ரிப்பின் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.
English Summary
What happened to abarna balamurali