3 மாவட்டங்களில் ''விஸ்வாசம்'' படம் வெளியிட தடை.! இன்னும் சற்று நேரத்தில் வெளியாகப்போகும் தீர்ப்பு.!!
VISHVAASAM MAY BE BAN IN KOVAI THIRUPUR ERODE
இயக்குனர் சிவா, அஜீத் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் விஸ்வாசம். இந்த படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். படத்தில், விவேக், தம்பிராமையா, விவேக், யோகி பாபு , ரோபோ சங்கர், இமான் அண்ணாச்சி, ரமேஷ் திலக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அஜித்துடன் நாயன்தாரா இணைந்து நடித்துள்ளார்.
இந்த திரைப்படம் உலகம் முழுவதும் படம் நாளை திரையிடப்பட இருக்கிறது. டிக்கட் புக்கிங் ஓபன் செய்த சில மணி நேரங்களில் புக்கிங் முடிந்தது. படம் நாளை வெளியாக இருப்பதால், ரசிகர்கள் போஸ்டர் ஒட்டுவது, கட்அவுட் வைப்பது போன்ற பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அஜித் நடித்த விஸ்வாசம் திரைப்படத்தை கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற பகுதிகளில் வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரிய வழக்கு இன்னும்
சற்றுநேரத்தில் (பிற்பகலில்) சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
கோவை, திருப்பூர், ஈரோடு பகுதிகளின் விஸ்வாசம் விநியோம உரிமையை சாய்பாபா என்பவர், சினிமா பைனான்சியர் உமாபதியிடம் ரூ.1 கோடி பெற்ற கடன் தொகையில் ரூ.78 லட்சத்தை திருப்பி தரவில்லை என்றும் பணத்தை திருப்பித்தரும் வரை விஸ்வாசம் திரைப்படத்தை திரையிட தடை விதிக்க வென்றும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் சினிமா பைனான்சியர் உமாபதி தொடர்ந்த வழக்கில் கோவை, திருப்பூர், ஈரோடு பகுதிகளின் விஸ்வாசம் திரைப்படத்தை வெளியிட தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், உமாபதிக்கு ரூ.35 லட்சம் ரூபாயை இன்றே வழங்குவதாகவும், மிதத் தொகையை 4 வாரத்திற்குள் வழங்குவதாக உத்தரவாதம் அளிப்பதாகவும் படத்தயாரிப்பாளர் நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நீதிபதியிடம் முறையிட்டுள்ளார்.
இதனை ஏற்று கொண்ட நீதிபதி, ''முறையீட்டை, மனுவாக தாக்கல் செய்தால் இன்றே விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படும்'' என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து, தயாரிப்பு நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை இன்னும் சற்று நேரத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.
English Summary
VISHVAASAM MAY BE BAN IN KOVAI THIRUPUR ERODE