கும்பகோணம் கோவிலில் பொங்கல் வைத்து வழிபாடு செய்த நயன்தாரா- விக்னேஷ் தம்பதி.! அப்ப கல்யாணம் கன்ஃபார்ம்.!  - Seithipunal
Seithipunal


கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் வரும் ஜூன் 9ஆம் தேதி திருப்பதியில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக கூறப்படுகிறது. இயக்குனர் விக்னேஷ் சிவனின் நானும் ரவுடிதான் திரைப்படத்தில் இருந்து இருவரும் காதலிக்க ஆரம்பித்தனர். 

ஆறு வருடங்களுக்கும் மேலாக இருவரும் காதலித்து வரும் நிலையில், அடிக்கடி ஊர் சுற்றுவது இவர்களது வழக்கம். வெளிநாடுகளுக்கு டூர் சென்று அங்கு எடுக்கின்ற புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருவார்கள். அப்போதெல்லாம் ரசிகர்கள் இருவருக்கும் திருமணம் எப்போது என்று கேட்டுக்கொண்டே இருப்பார்கள். 

சமீப காலமாக இருவரும் கோவில் கோவிலாக சுற்றி வருகின்றனர். இறுதியாக விக்னேஷ் சிவன் காத்துவாக்குல 2 காதல் படத்தை இயக்கிய இருந்த நிலையில், அடுத்ததாக தல அஜீத் குமாரை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார். 

இந்த நிலையில், தற்போது நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் கும்பகோணம் அருகில் உள்ள வழுத்தூர் கிராமத்தில் இருக்கும் கோவிலில் பொங்கல் வைத்து வழிபாடு செய்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vignesh sivan and nayanathra in kumbakonam temple 


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->