தமிழ் சினிமாவின் இந்த பிரபல நடிகர் தான் விக்ரமின் மச்சானா.?! ஆச்சர்ய தகவல்.!  - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர்  சீயான் விக்ரம். இவர் 1990 ஆம் ஆண்டு வெளியான என் காதல் கண்மணி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு 9 ஆண்டுகள் சினிமா துறையில் மிகவும் கஷ்டப்பட்டு சேது திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானவர் விக்ரம். அதனைத் தொடர்ந்து இவர் நடித்த தில்,  தூள், சாமி, ஜெமினி ஆகிய திரைப்படங்களின் தொடர் வெற்றியால் தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோக்களில் ஒருவராக உயர்ந்தவர்.

மணிரத்தினம் இயக்கிய வரலாற்று நாவலை தெளிவு எடுக்கப்பட்ட பொன்னியின் செல்வன் திரைப்படத்தில்  முக்கிய கதாபாத்திரம் ஏற்றும் நடித்திருந்தார் விக்ரம். இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

கே ஜி எஃப் தங்கச் சுரங்கங்களில்  பணியாற்றிய மக்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டு வரும் இந்த திரைப்படத்திற்கான சூட்டிங்  தற்போது மும்முறமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வருகின்ற ஏப்ரல் மாதம் இவர் நடித்திருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகமும் வெளியாக இருக்கிறது.

70களின் இறுதியிலும் 80களிலும் தமிழ் சினிமாவில் கதாநாயகன் வில்லன் குணசித் நடிகர் என பல பரிணாமங்களில் நடிப்பை வெளிப்படுத்தியவர் தியாகராஜன். நடிகர் பிரசாந்தின் தந்தையான இவர்  விக்ரமின் தாய் மாமா என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் பிரசாந்த் விக்ரமின் மைத்துனர். இவர்கள் இருவரது குடும்பமும் மிகவும் நெருக்கமான உறவு முறை என்றாலும்  இரு குடும்பங்களுக்கிடையே ஏற்பட்டுள்ள மனஸ்தாபத்தால் அவர்கள் நீண்ட காலமாக பேசிக்கொள்வது இல்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

this famous actor and his son both are close relatives to chiyaan vikram


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->