சினிமாவில் ஆணாதிக்கம்.. சுருதிஹாசனை தொடர்ந்து தமன்னாவும் சர்ச்சை.!  - Seithipunal
Seithipunal


தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகை தமன்னா. இவர் தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் தற்போது சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். 

இந்த நிலையில் நடிகை தமன்னாவின் சமீபத்திய பேட்டி ஒன்றில், "சினிமாவில் பெண்களுக்கு மரியாதை சுத்தமாக இருப்பதில்லை. பெண்கள் கூறும் கருத்துக்களை ஒரு பொருட்டாகக் கூட யாரும் மதிப்பதில்லை. 

கதாநாயகர்களுக்கு கொடுக்கும் சம்பளத்தில் பாதி கூட கதாநாயகிகளுக்கு கொடுக்கப்படுவதில்லை. பட போஸ்டர்களில் ஹீரோயின் படம் வருவதே மிகப்பெரிய விஷயமாக இருக்கிறது. புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு ஹீரோ வரவில்லை என்றால் அதை வேறு மாதிரியாகவும், அதுவே ஹீரோயின்கள் வரவில்லை என்றால் அதை மிக மோசமானதாகவும் விமர்சனம் செய்கின்றனர்.

இந்த நிலைமை எல்லாம் எப்பொழுதும் மாறும் என்பது தெரிய வில்லை என நடிகை தமன்னா ஆதங்கத்துடன் பேசியுள்ளார். ஏற்கனவே நடிகை சுருதிஹாசனும் சினிமா ஆணாதிக்கம் நிறைந்ததாக இருப்பதாக பேசியது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thamanna speech about Kollywood


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->