சுந்தர்.சி விடமாட்டார் போலயே.? அரண்மனை 4- ல் கைகோர்த்த அந்த 2 நடிகைகள்.! - Seithipunal
Seithipunal


இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் உருவான அரண்மனை திரைப்படம் இதுவரை 3 பாகங்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதில், கடந்த 2021ம் ஆண்டு வெளியான அரண்மனை 3 திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்த படத்தில் நடிகர் ஆர்யா, ராசிகன்னா, ஆண்ட்ரியா, யோகி பாபு, சாக்ஷி அகர்வால், நளினி, நந்தினி, மனோபாலா, சம்பத், அமித் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலரும் நடித்தனர். கலவையான விமர்சனங்களை பெற்ற இந்த திரைப்படத்தை ஃபேமிலி ஆடியன்ஸ் காப்பாற்றினார்கள். அதன் காரணமாக அரண்மனை 3 அனைத்து இடங்களிலும் வசூல் வேட்டை நடத்தியது.

அதன் தொடர்ச்சியாக அரண்மனை 4  திரைப்படத்தை இயக்குனர் சுந்தர்.சி அடுத்து இயக்க உள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்தப் படத்தில் நடிகைகள் தமன்னா மற்றும் ராஷிகண்ணா ஆகியோர் நடிக்க உள்ளனர்.

இதில் ஏற்கெனவே, நடிகை ராஷிகண்ணா அரண்மனை 3 படத்தில் கதாநாயகியாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மார்ச் மாதம் முதல் வாரத்தில் இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tammanna and rashi Khanna act in aranmanai 4 movie


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->