'அரண்மனை 4' படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. இன்று முதல் படப்பிடிப்பு தொடக்கம்.! - Seithipunal
Seithipunal


இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் உருவான அரண்மனை திரைப்படம் இதுவரை 3 பாகங்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதில், கடந்த 2021ம் ஆண்டு வெளியான அரண்மனை 3 திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்த படத்தில் நடிகர் ஆர்யா, ராசிகன்னா, ஆண்ட்ரியா, யோகி பாபு, சாக்ஷி அகர்வால், நளினி, நந்தினி, மனோபாலா, சம்பத், அமித் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலரும் நடித்திருந்தனர். 

கலவையான விமர்சனங்களை பெற்ற இந்த திரைப்படத்தை ஃபேமிலி ஆடியன்ஸ் காப்பாற்றியது. அதன் காரணமாக அரண்மனை 3 அனைத்து இடங்களிலும் வசூல் வேட்டை நடத்தியது.

இந்த நிலையில் அதன் தொடர்ச்சியாக அரண்மனை 4  திரைப்படத்தை இயக்குனர் சுந்தர்.சி இயக்க உள்ளார். இந்தப் படத்தில் நடிகைகள் தமன்னா மற்றும் ராஷிகண்ணா ஆகியோர் நடிக்க உள்ளனர். 

இதில், நடிகை ராஷிகண்ணா ஏற்கனவே அரண்மனை 3 படத்தில் கதாநாயகியாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அரண்மனை 4 திரைப்படத்தின் முதற்கட்ட படைப்பிடிப்பு இன்று சென்னையில் நடைபெற்றுள்ளது. இந்த படப்பிடிப்பில் இயக்குனர் சுந்தர்.சி, ராஷி கண்ணா மற்றும் தமன்னா ஆகியோர் கலந்து கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sundar C in aranmanai 4 movie shooting starts from today


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->