கர்ப்பமாக இருக்கும் போது மனைவியை விவாகரத்து செய்ய நினைத்தாரா..?! மனம் திறந்த சிவகார்த்திகேயன்.!  - Seithipunal
Seithipunal


பிரபல நடிகரான சிவகார்த்திகேயன் தன்னுடைய 34வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மெரினா திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் சிவகார்த்திகேயன். தன்னுடைய முயற்சியாலும் திறமையாலும் தவிர்க்க முடியாத நடிகனாக உருவெடுத்து இருக்கின்றேன். 

தற்போது சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்து ஓரிரு படங்களை எடுத்து அதில் வெற்றியும் பெற்றுள்ளார். தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு தனது குடும்பம் குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், "எனது மனைவி ஆர்த்தி தாய் மாமனின் மகள். எங்கள் குடும்பத்தில் குழந்தை வளர்ப்பு, வருமானவரி என அனைத்துமே அவர் கையில்தான். 

அவரை திருமணம் செய்து கொள்ளும் பொழுது அவருக்கு 21 வயது. நல்ல வசதியான பெண். ஆனால், வெளியில் காட்டிக்கொள்ள மாட்டார்,. அவர் சமையலில் கில்லாடி, ஆர்த்தி கர்ப்பமாக இருந்த பொழுது அவரை நான் விவாகரத்து செய்யப் போகிறேன் என்று செய்திகள் வெளிவந்தது.

நான் அந்த செய்தியை அவரிடம் இருந்தும் மறைத்து இருந்தேன். ஆனால், அவர் மறுநாளே திரைத்துறையில் இருந்தால் இப்படியெல்லாம் நடக்கும் என்று தெரியும்m பார்த்துக்கொள்ளலாம், என்று எனக்கு ஆறுதல் கூறியதால் எனக்கு அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது. மனைவி குழந்தையை விட்டு என்னால் இருக்க முடியாது, அதனால் வெளியூர் சென்றால் உடன் அழைத்துச் சென்று விடுவேன்." என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க : எல்லாத்தையும் சத்தமே இல்லாம முடிச்சுருவார்! இளம் நடிகையிடம் வேலையை காண்பித்த தனுஷ்!! தலைவனுக்கு இதெல்லாம் அத்துப்படி! http://bit.ly/2uXiJ8Z


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sivakarthikeyan sharing her memories


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->