வெற்றிமாறனின் கருத்துக்கு இயக்குனர் மணிரத்னத்திடம் போய் கேளுங்கள்.. கொந்தளித்த சரத்குமார்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான சரத்குமார் 'ஆழி' திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக கன்னியாகுமரி சென்றுள்ளார். இதனையடுத்து அங்குள்ள ஆதி கேசவ பெருமாள் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

அதன்பின்னர் கோயில் வெளியே செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், பொன்னியின் செல்வன் படத்தில் நடித்தது சிறந்த அனுபவமாக இருந்ததாகவும், மணிரத்தினம் என்னை இந்த திரைப்படத்தில் பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடிக்க தேர்வு செய்தது மகிழ்ச்சி அளித்திருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

அதனைத்தொடர்ந்து பொன்னியின் செல்வன் படத்தில் ராஜராஜ சோழன் இந்து மன்னராக சித்தரிக்கப்பட்டுள்ளதாக இயக்குனர் வெற்றிமாறன் பேசியது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு கோபமாக பதில் அளித்த அவர், படத்தின் இயக்குனரிடம் தான் இந்த கேள்வியை கேட்க வேண்டும். இது சுதந்திர நாடு யாருக்கும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்யும் உரிமை உண்டு என தெரிவித்தார்.

மேலும், படத்தில் குறை இருந்தால் இயக்குனரிடம் தான் கேட்க வேண்டும். வெற்றிமாறனின் விமர்சனத்திற்கு மணிரத்தினம் அல்லது எழுத்தாளர் ஜெயம் மகனின் தான் விளக்கம் கேட்க வேண்டும் என சரத்குமார் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sarathkumar speech about vetrimaran controversy


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->