இயக்குனரை புறக்கணித்த அனுஷ்கா.?! சமந்தாவுக்கு அடித்த அதிர்ஷ்டம்.!
samantha commit with sakundhalai movie
பாகுபலி படம் ஒன்று இரண்டு என அணைத்து பாகங்களும் வெற்றி பெற்றதை தொடர்ந்து வரலாற்று படங்களுக்கு சினிமாத்துறையில் மவுசு அதிகமாக உள்ளது. இதன் காரணமாக தற்போது நிறைய வரலாற்று திரைப் படங்கள் புராணத்தை தழுவி எடுக்கப்பட்டு வருகின்றது.
இத்தகைய சூழலில், இயக்குனர் குணசேகரன் சகுந்தலை புராண கதையை சினிமா படமாக எடுக்க திட்டமிட்டுள்ளார். இந்த படத்திற்கு சகுந்தலம் என அவர் பெயரிட்டுள்ளார். முன்னதாக நடிகை அனுஷ்க்கா நடித்த ருத்ரமா தேவி படத்தை இவர் தமிழ், தெலுங்கில் இயக்கியவர்.
சகுந்தலை மகாபாரதத்தின் ஒரு கதாபாத்திரமாகும். மேனகைக்கும், விசுவாமித்திர முனிவருக்கும் பிறந்த பெண் தான் சகுந்தலை. இவர், மன்னர் துஷ்யந்தனை காதலித்து காந்தர்வ மணம் புரிகிறார். ஆனால், ஒரு கட்டத்தில் துஷ்யந்தன் அவரைப் பிரிகிறார். கணவர் துஷ்யந்தன் முனிவர் சாபத்தால், அவரை மறக்கும் நிலை ஏற்படுகின்றது. அவருடைய மகன்தான் பரதன். பல துன்பங்களை கடந்து சகுந்தலை தன்னுடைய கணவருடன் மீண்டும் எப்படி இணைகிறார் என்பது தான் சகுந்தலையின் கதை.
இதை மையமாக வைத்துதான் இந்த படம் உருவாகின்றது. இப்படத்திற்கு மணிசர்மா இசையமைக்க உள்ளார். சகுந்தலம் என்ற திரை படத்தில் சகுந்தலா கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக இயக்குனர் நடிகை அனுஷ்கா மற்றும் பூஜா ஹெக்டே ஆகியோரை அணுகியுள்ளார். ஆனால், அவர்கள் நடிக்க மறுத்ததாக தெரிவிக்கப்படுகிறது. எனவே, இந்த கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை சமந்தாவை தேர்வு செய்து இருப்பதாக படக்குழுவினர் தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
English Summary
samantha commit with sakundhalai movie