கனவு கதாபாத்திரத்தில் நடித்த சரத்குமார்.. ரஜினி செய்த வேலையை பாருங்கள்.!  - Seithipunal
Seithipunal


நடிகர் ரஜினிகாந்த் பொன்னியின் செல்வம் திரைப்படத்தில் பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடிப்பது தனது கனவு என்று கூறிய நிலையில் அந்த கதாபாத்திரத்தில் நடித்த சரத்குமாரை அவர் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். 

நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் இதை பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். பல ஆண்டு காலமாக அனைவரது மனதையும் கவர்ந்த பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக வேண்டும் என்று முயற்சித்து தோற்றுப் போன நிலையில், பலரது ஆசையை நிறைவேற்றியுள்ளார் மணிரத்தினம். 

வந்தான் சோழன்... திரையரங்குகளில் வெளியானது பொன்னியின் செல்வன்.! -  Seithipunal

இந்த படம் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகியது. இதன் இசை வெளியீட்டு விழா நடைபெற்ற போது அதில் ரஜினிகாந்த் கலந்துகொண்டு இந்த நாவலுடன் தனக்கு ஏற்பட்ட உணர்வுகள் குறித்து சுவாரஸ்யமாக பகிர்ந்தார். அத்துடன் இதில் பெரிய  பழுவேட்டரையர் கதாபாத்திரம் என்னுடைய கனவு கதாபாத்திரம் அதில் நான் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதற்கு மணிரத்தினம் மறுப்பு தெரிவித்துவிட்டார் என்று தெரிவித்தார். 

இதில் பெரிய  பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் சரத்குமார் நடித்திருந்தார். இந்நிலையில், அதில் சரத்குமார் சிறப்பாக நடித்திருந்ததாக கூறி செல்போனில் அழைத்து ரஜினி பாராட்டியுள்ளார். இந்த பாராட்டுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சரத்குமார் மற்றும் வரலட்சுமி இருவரும் ரஜினியை தற்போது நேரில் சந்தித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rajinikanth wishes to sarathkumar


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->