நயன்தாரா படத்தின் அடுத்த அப்டேட் வெளியீடு - Seithipunal
Seithipunal


மகாராஜா படத்தை இயக்கிய நிதிலன் சுவாமிநாதன், அடுத்ததாக நயன்தாராவை வைத்து படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சுவாமிநாதன், நடிகர் விஜய் சேதுபதியை வைத்து மகாராஜா திரைப்படத்தை இயக்கிநார். இந்த படத்தை சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரித்துள்ளனர். இத்திரைப்படம் கடந்த ஜூன் 14-ம் தேதி வெளியான முதல் நாளிலிருந்தே மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வந்தது.

விஜய் சேதுபதியின் 50-வது திரைப்படமான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதோடு, கதாநாயகனாக விஜய் சேதுபதிக்கும் ஒரு நல்ல கம்பேக் திரைப்படமாக அமைந்தது. இத்திரைப்படத்தின் வசூல் 100 கோடி ரூபாயை தாண்டியது.   இதனைத் தொடர்ந்து, இயக்குநர் நிதிலன் சுவாமிநாதன் அடுத்ததாக யாரை வைத்து படம் உருவாக்க உள்ளார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரின் அடுத்த படம் தொடர்பான அப்டேட் வெளியாகி உள்ளது.

அதன்படி, இயக்குநர் நிதிலன் சுவாமிநாதன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாராவை வைத்து படம் இயக்க உள்ளதாத தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்திற்கு மகாராணி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Next update release of Nayanthara movie


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->