தேசிய மகளிர் ஆணையம் மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்கும்: குஷ்பு ஆவேசம்! - Seithipunal
Seithipunal


நடிகர் மன்சூர் அலிகான், திரிஷா குறித்து தெரிவித்த சர்ச்சை கருத்துகள் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என பா.ஜ.கவைச் சேர்ந்த நடிகை குஷ்பூ தெரிவித்துள்ளார். 

லியோ படத்தில் நடித்தது தொடர்பாக பேசிய மன்சூர் அலிகான், திரிஷா குறித்து மிகவும் சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்தார். இதற்கு நடிகை திரிஷா, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர். 

இது தொடர்பாக குஷ்பூ சமூக வலைதளத்தில், நான் தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக ஏற்கனவே மன்சூர் அலிகான் பேசிய கருத்துக்கள் குறித்து ஆணையத்தின் உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளேன். 

மன்சூர் அலிகான் மீது மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்கும். இது போன்ற இழிவான சிந்தனை கொண்டவர்கள் யாரும் தப்பிக்க முடியாது. 

திரிஷா மற்றும் மற்ற பெண்களுக்கு ஆதரவாக நான் நிற்கிறேன். பெண்களை பாதுகாக்கவும் அவர்களது கண்ணியத்திற்காகவும் நாம் போராடி வருகிறோம். ஆனால் இவரைப் போன்றவர்கள் பெண்கள் தொடர்பாக இழிவான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் என குறிப்பிட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

National Commission for Women take action against Mansoor AliKhan


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->