நிர்வாண ஃபோட்டோஷூட் விவகாரம்: ரன்வீர் சிங்கிற்கு போலிசார் சம்மன்.?! - Seithipunal
Seithipunal


பிரபல நடிகரான ரன்வீர் சிங் கடந்த ஜூலை  21ஆம் தேதி தனது நிர்வாண புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருந்தார். இது வைரலான நிலையில் சமூக வலைதளங்களில் சர்ச்சை ஏற்பட்டது. 

இதனைத் தொடர்ந்து அவர் மீது மும்பை போலீசாரிடம் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. தற்போது அவர் ஆலியா பட், தர்மேந்திரா சபானா மற்றும் ஜெயா பச்சன் உள்ளிட்டோருடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் 2023 வெளியாக இருக்கிறது. 

இத்தகைய நிலையில், நடிகர் ரன்வீர் சிங்குக்கு மும்பை காவல்துறையினர் சம்மன் அனுப்ப முடிவெடுத்துள்ளனர். பெண்களின் உணர்வுகளை புண்படுத்தி விட்டதாக கூறி அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் ,அவர் ஷூட்டிங் காரணமாக வெளியூர் சென்றுள்ளார்.

எனவே, அவருக்கு போலீசாரால் சம்மன் அனுப்ப முடியவில்லை. அவர் மும்பைக்கு திரும்பியவுடன் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று விரைவில் நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும் வெளியான தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mumbai Police summon To ranveer Singh


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->