மும்பை மாடல் அழகியை மிரட்டி.. ஆபாச படம்., கைதான அனிருத்.! மற்றவர்களுக்கு வலை.!
Mumbai Model Cheated By web series Producer
மும்பையில் உள்ள சார்க்கோன் பகுதியில் 29 வயதான ஒரு பெண்ணுக்கு வெப் சீரிஸ் தயாரிப்பாளர் யாஸ்மின்கானுடன் அறிமுகம் ஏற்பட்டது. யாஸ்மின் வெளிநாட்டு ரசிகர்களுக்காக வெப் சீரிஸ் தயாரிப்பதாக கூறி அவருக்கு வாய்ப்பு தருவதாக தெரிவித்துள்ளார் .
இதற்காக படப்பிடிப்பு நடத்தப்பட்ட நிலையில் ஆடைகளை களைந்து விட்டு கேமரா முன் நிற்குமாறு யாஸ்மின் கூறியுள்ளார். ஆனால் அதற்கு அந்த மாடல் அழகி ஒத்துக் கொள்ளவில்லை என்ற காரணத்தால் யாஸ்மின் கான் மற்றும் சீரியல் நடிகர்கள் ஆதித்யா, அனிருத் உள்ளிட்டோர் சமாதானம் செய்து இருக்கின்றனர்.
மேலும், இது வெளிநாட்டு வெப் சீரிஸ் என்றும் இந்தியாவில் வெளியிடப்படாது என்றும் கூறியுள்ளனர். இதில் நடிக்க மறுத்தால் 15 லட்சம் ரூபாய் அபராதம் போட உள்ளதாக தெரிவித்தனர். எனவே மாடல் அழகி அதில் நடிக்க ஒப்புக்கொண்டார்.
கடந்த அக்டோபர் 22 இல் அவரது படம் சமூக வலைதளங்களில் வெளியாகியது. இது அவரது உறவினர்களுக்கு தெரிய வர தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மாடல் அழகி இதை டெலிட் செய்யும்படி யாஸ்மினுக்கு கால் செய்து கூறினார். உடனே யாஸ்மின் பணம் கொடுத்தால் படத்தை அகற்றி விடுவேன் என்று மிரட்டி உள்ளார்.
உடனே அதிர்ச்சி அடைந்த மாடல் அழகி காவல் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் அனிருத் என்ற ஒருவரை போலீசார் கைது செய்த நிலையில் மற்ற மூன்று பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
English Summary
Mumbai Model Cheated By web series Producer