மாரடைப்பால் பிரபல நடிகர் மரணம் - அதிர்ச்சியில் திரையுலகம்.! - Seithipunal
Seithipunal


மாரடைப்பால் பிரபல நடிகர் மரணம் - அதிர்ச்சியில் திரையுலகம்.!

பழம்பெரும் மலையாள நடிகரான குந்தரா ஜானி கடந்த 1979-ம் ஆண்டு 'நித்யா வசந்தம்' என்ற படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தார். அதன் பிறகு மலையாளம், கன்னடம், தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.

பெரும்பாலான படங்களில் வில்லன் வேடங்களிலேயே நடித்துள்ளார். நான்கு தசாப்த கால வாழ்க்கையில், ஜானி 'மீன்', 'பரங்கிமலை', 'கரிம்பனா', 'காட்பாதர்', 'நாடோடிகாற்று', 'பரத்சந்திரன் ஐபிஎஸ்', 'ஸ்படிகம்' உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 

இந்த நிலையில், குந்தரா ஜானிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனே அவரது குடும்பத்தினரை அவரை மீட்டு சிகிச்சைக்காக கொல்லம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவருடைய இந்த திடீர் மறைவால் திரை பிரபலங்கள், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

malaiyala actor kunthara johny passed away


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->