'குடித்துவிட்டு தான் அதை செய்வேன்.' கேஜிஎப்-2 இயக்குனர் ஓபன் டாக்.! - Seithipunal
Seithipunal


தற்போது உலகம் முழுவதும் ஹிட்டான திரைப்படமாக கேஜிஎப் 2 ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த திரைப்படத்தை எடுத்ததன் மூலம் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர் என்ற பெயரை பிரசாந்த் நீல் எடுத்திருக்கிறார்.

இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் குடித்த பின் தான் கதை எழுதுவேன் என்று பேசி இருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதுகுறித்து அவர்," குடித்த பின்னர் தான் கதைகளை எழுதுவது வழக்கம் மறுநாள் நான் நிதானமாக இருக்கும்பொழுது, போதையில் இருந்தபோது எழுதிய என்னுடைய கதைகளை நான் எடுத்து படித்து பார்ப்பேன். எனக்கு அது சிறந்ததாக தோன்றினால் உடனே அதற்கான திரைக்கதையை எழுதுவேன்." என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.

 பொதுவாக திரை உலகில் இருக்கும் பலருக்கும் குடிப்பழக்கம் இயல்பாக இருக்கும் என்ற பேச்சு இருக்கிறது. தற்போது இது போன்ற பழக்கங்களை மிகவும் வெளிப்படையாக அவர்கள் கூறி விடுகின்றனர். இயக்குனர் பிரசாந்த் நீல் இப்படி வெளிப்படையாக தனது குடிப்பழக்கம் குறித்து பேசி இருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக இருக்கிறது.

 அதாவது குடித்துவிட்டு கதை எழுதினால் நன்றாக இருக்கும் என்ற தோற்றத்தை அவர் ஏற்படுத்துவதை போல இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kgf director open talk


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->