"அவரு என்ன இப்படி பண்றாரு"? நெருங்கி பழக விரும்பும் விஜய் சேதுபதி! ஓட்டம் எடுத்த ஸ்ருதிஹாசன்! ஜவான் ஷூட்டிங்கில் ஷாக் சம்பவம்! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமா மற்றும் இந்திய சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான விடுதலை திரைப்படத்தின் ஒன்றாம் பாகம் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பு பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இவர் ஷாகித் கபூருடன் இணைந்து நடித்த பார்சி என்ற இணையதள தொடரும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

தற்போது விஜய் சேதுபதி அட்லி இயக்கும் ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக நடித்துக் கொண்டிருக்கிறார். மேலும் காந்தி டாக்ஸ், மெர்ரி கிறிஸ்மஸ், மும்பை கார் போன்ற பல ஹிந்தி திரைப்படங்களிலும் தொடர்ந்து நடிக்க இருக்கிறார் இவர்.

இந்நிலையில் விஜய் சேதுபதி மற்றும்  ஸ்ருதிஹாசனிடையே நடைபெற்ற ஒரு சம்பவம் தற்போது செய்திகளாக வெளியாகி வைரலாகி இருக்கிறது. விஜய் சேதுபதி செய்த அந்த சம்பவத்தால் ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்தே எழுந்து போய் விட்டாராம் ஸ்ருதிஹாசன். இதனால் படக்குழுவே அதிர்ந்து போய் இருந்திருக்கிறார்கள். 2021 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் எஸ்பி ஜனநாதன் இயக்கத்தில் உருவான திரைப்படம் லாபம்.

இந்தத் திரைப்படத்தின் ஷூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது கொரோனா சற்று குறைந்து ஓரளவு தளர்வுகளுடன் படப்பிடிப்புகள் அனுமதிக்கப்பட்ட காலம். அப்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் சேதுபதி தன்னை பார்க்க வரும் ரசிகர்களுக்கு  முத்தம் கொடுத்து கொண்டு இருப்பாராம். எல்லோரும் பயந்து முக கவசத்துடன் அணியும் போது அவர் மட்டும் முக கவசம் அணியாமல் ரசிகர்களுக்கு மிகவும் அருகில் சென்று புகைப்படம் எடுப்பது முத்தம் கொடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்திருக்கிறார். இதைக் கண்டு அதிர்ந்து போன சுருதிஹாசன் அன்று ஷூட்டிங் போது விஜய் சேதுபதி உடன் நடிக்க காட்சியிருப்பதால் பயந்து சூட்டிங் ஸ்பாட்டில் இருந்தே ஓடி விட்டாராம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Is this what happened to Shruti Haasan when Vijay Sethupathi who came close ran over


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->