அடடே அப்படியா... "குஷ்பூ இல்லைனா அந்த நடிகை தான்" இயக்குனர் சுந்தர். சி யின் மனம் திறந்த பேட்டி! - Seithipunal
Seithipunal



தமிழ் சினிமாவில் முறை மாமன் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சுந்தர் சி. இவர் பழம்பெரும் இயக்குனரான மணிவண்ணனிடம்  உதவி இயக்குனராகப் பணியாற்றியவர். உள்ளத்தை அள்ளித்தா, அன்பே சிவம், வின்னர், மேட்டுக்குடி, அருணாச்சலம் போன்ற பல வெற்றி திரைப்படங்களை கொடுத்தவர்.

தற்போது இவர் அரண்மனை என்னும்  நகைச்சுவை கலந்த திகில் படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படம் மூன்று பாகங்கள் வெளிவந்த நிலையில் தற்போது நான்காவது பாகம் படப்பிடிப்பில் இருக்கிறது. 2006 ஆம் ஆண்டு வெளியான தலைநகரம் திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் அவதாரம் எடுத்த இவர் பல காமெடி மற்றும் ஆக்சன் திரைப்படங்களில் நடித்து ஒரு கமர்சியல் ஹீரோவாக வளர்ந்து வந்தார்.

தற்போது நடிப்பை விட்டு விட்டு மீண்டும் டைரக்ஷன் துறைக்கு சென்று விட்டார்  சுந்தர் சி. இந்நிலையில் தனது காதல் மற்றும் திருமணம் குறித்தும் பழைய மலரும் நினைவுகளை பகிர்ந்திருக்கிறார் சுந்தர் சி. அந்த பேட்டியின் போது குஷ்பூ உங்கள் வாழ்க்கையில் வரவில்லை என்றால் யாரை திருமணம் செய்திருப்பீர்கள் என கேட்டதற்கு ஒரு நொடி கூட தயங்காமல் பதலளித்துள்ளார்.

அவர் கூறியதாவது, தனக்கு இரண்டு நடிகைகள் மிகவும் பிடிக்கும் என்றும் அதில் ஒருவர் குஷ்பூ மற்றொருவர் சௌந்தர்யா என தெரிவித்திருக்கிறார் சுந்தர். சி‌. அதன் காரணமாக ஒருவேளை என்னுடைய வாழ்வில் குஷ்பு வரவில்லை என்றால் நான் சௌந்தர்யாவைத்தான்  ப்ரொபோஸ் செய்திருப்பேன் என மனம் திறந்து இருக்கிறார் சுந்தர் சி. இவருக்கும் நடிகை குஷ்பூவும் கடந்த 2000 ஆண்டு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

If Khushboo hadnt come I would have proposed to her Sundar C Open minded interview.


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->