பிரபல தெலுங்கு நடிகருக்கு கொரோனா.! மருத்துவமனையில் அனுமதி.!
Famous Telugu actor Posani Krishna Murali vivid tests positive
பிரபல தெலுங்கு பட நடிகர் போசானி கிருஷ்ணா முரளி, மூன்றாவது முறையாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரபல தெலுங்கு பட நடிகர் போசானி கிருஷ்ணா முரளி, திரைக்கதை எழுத்தாளர் மற்றும் இயக்குனர் ஆவார். தெலுங்கில் 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக திரையுலகில் உள்ளார். சமீபத்தில் இவரை ஆந்திர மாநில திரைப்பட மேம்பாட்டு கழக தலைவராக அரசு நியமித்தது. மேலும் தனது பல்துறை நடிப்புத் திறனுக்காக அறியப்பட்ட இவர், பல விருதுகளை வென்றுள்ளார்.
இந்நிலையில், புனேயில் நடந்த தெலுங்கு படப்பிடிப்பில் பங்கேற்று விட்டு ஐதராபாத் திரும்பியபோது அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அப்பொழுது கொரோனா பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, சிகிச்சைக்காக ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் போசானி கிருஷ்ணா முரளிக்கு ஏற்கனவே இரண்டு முறை கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், தற்போது மூன்றாவது முறையாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Famous Telugu actor Posani Krishna Murali vivid tests positive