"சிவாஜி கணேசன் சிலைக்கு நிதி கேட்டாங்க.. ஆனா" இசைஞானி பேச்சு.!
Elayaraja about suvagi ganesan
தென்னிந்திய சினிமாவில் தலை சிறந்த நடிகராக இருந்தவர் தான் சிவாஜி கணேசன். தனது திறமையான, அற்புதமான நடிப்பால் தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்தவர் சிவாஜி கணேசன்.
சிவாஜி கணேசன் பற்றி பல நாட்கள் ஆய்வு செய்து 1600 பக்கங்கள் கொண்ட ஒரு நூல் எழுதப்பட்டுள்ளது. இந்த நூலை மருதமோகன் என்பவர் எழுதியிருக்கிறார் இன்று சென்னையில் இந்த நூல் வெளியீட்டு விழா நடைபெறுகின்றது.
சிவாஜி கணேசன் நூல் வெளியீட்டு விழாவில் பிரபு, ராஜ்குமார், பாரதிராஜா, இளையராஜா மற்றும் விக்ரம் பிரபு உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கின்றனர்.
இத்தகைய நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய இசைஞானி இளையராஜா, "ஒரு முறை சிவாஜிக்கு சிலை வைக்க வேண்டும் என என்னிடம் திரையுலகை சேர்ந்தவர்கள் நிதி கேட்டனர். ஆனால், நான் சிவாஜி சிலை செய்வதற்கு தேவையான முழு செலவையும் ஏற்றுக் கொண்டேன்." என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Elayaraja about suvagi ganesan