எனது அடுத்தப் படத்துல இவரு தான் - டைரக்டர் அஸ்வத் மாரிமுத்து ஓபன் டாக்.!
director asvath marimuththu work with silambarasan next movie
'கோமாளி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் 'லவ் டுடே' படத்தை இயக்கி நடித்தார். இந்த படம் மிகப்பெரிய அளவில் ஹிட்டானதையடுத்து பிரதீப் ரங்கநாதன் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'எல்ஐசி' படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
இந்த படத்தை தொடர்ந்து ஏஜிஎஸ் தயாரிப்பில் அடுத்த படத்திலும் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். அந்த படத்தை 'ஓ மை கடவுளே' இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்க இருக்கிறார். இந்த புதிய படத்தின் தலைப்பு விரைவில் வெளியாக உள்ளதாக பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு மே மாதம் தொடங்கவுள்ள நிலையில், திரைப்படம் சம்பந்தமான அறிமுக விடியோவை படக்குழு வெளியிட்டது. இதனை இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து தனது எக்ஸ் தளபக்கத்தில், "அனைத்து சிம்பு சார் ரசிகர்களுக்கும்! சார் என்னை அழைத்து பாராட்டினார்.
அவருக்காக நான் வித்தியாசமான ஸ்கிரிப்ட் வைத்துள்ளேன் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். எனது அடுத்த படத்தை இவரை வைத்து இயக்க விரும்புகிறேன். அவர் தயாரானதும் அடுத்தக்கட்டத்திற்கு செல்வேன்" என்று பதிவிட்டுள்ளார்.
English Summary
director asvath marimuththu work with silambarasan next movie