ரன்வீர் சிங் - தீபிகா படுகோன் விவாகரத்து.? இணையத்தில் வைரலாகும் பதிவு.! - Seithipunal
Seithipunal


பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தீபிகா படுகோன். இவர் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக 'கோச்சடையான்' என்ற அனிமேஷன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இவர் பிரபல பாலிவுட் நடிகரான ரன்வீர் சிங்கை காதலித்து கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தீபிகா படுகோன் படுக்கை அறை காட்சி மற்றும் கவர்ச்சியாக நடிப்பதாக விமர்சனங்கள் எழுந்தன.

இதில் கவர்ச்சியாக நடிப்பது கணவரான ரன்வீர் சிங்குக்கு பிடிக்கவில்லை என்றும் இதனால் இருவரும் பிரிந்து விவாகரத்து செய்யும் முடிவில் இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் தீயாக பரவியது. 

அதனை உறுதிப்படுத்தும் வகையில் ஒரு நிகழ்ச்சியில் ரன்வீர் சிங்கின் கையைப் பிடிக்காமல் தீபிகா படுகோன் உதறிவிட்டு சென்ற காட்சிகளும் வெளியாகி வைரலாகியது. இந்த நிலையில் தீபிகா படுகோன் ரன்வீர் சிங் உடனான உறவு குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் விளக்கம் அளித்து பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், "உங்களை எல்லா விதத்திலும் சிரிக்க வைக்க கூடிய வாழ்க்கையை அழகாக்க கூடிய உங்கள் நண்பரையே காதலித்து திருமணம் செய்து கொள்ளுங்கள். அப்போதுதான் உங்கள் வாழ்க்கை நானும் ரன்வீர் சிங்கம் இருப்பது போல் மகிழ்ச்சியாக இருக்கும்" என விவாகரத்து குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Deepika Padukone explain about relationship with ranveer singh


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->