வெந்து தணிந்தது காடு படத்தை பார்த்து விட்டு.. தலையில் தண்ணீர் ஊற்றிய கூல் சுரேஷ்.. காரணம் என்ன தெரியுமா.? - Seithipunal
Seithipunal


இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில் சிம்புவின் தீவிர ரசிகரான கூல் சுரேஷ் வெந்து படத்தை பார்த்துவிட்டு திரையரங்கை விட்டு வெளியில் வரும்போது தலையில் முண்டாக, கழுத்தில் மாலையுடன் வந்த சுரேஷ், தண்ணீரை தன் தலையில் ஊற்றிக் கொண்டார்.

இது குறித்து அவரிடம் கேட்டபோது, படம் நன்றாக ஓட வேண்டும் என்பதற்காக திருவண்ணாமலை அங்க பிரவேசம் செய்த தீர்த்த தண்ணீர் என்று கூறினார். மேலும் படம் வேற லெவலில் இருப்பதாகவும் ஹீரோயிசம் கம்மியாக இருப்பதால் மற்ற ஹீரோக்கள் யாரும் இந்த படத்தில் நடிக்க மாட்டார்கள் என்றும் சிம்பு மட்டும்தான் துணிந்து நடித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் படத்தின் நீளத்தை கம்மி பண்ணினால் இன்னும் மிரட்டலாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cool suresh watched venthu thanithathu kaadu movie after bathing


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->