பிரபல நடிகர் தற்கொலை முயற்சி.. ரத்த வெள்ளத்தில் மருத்துவமனையில் சிகிச்சை.!
Bengal actor suicide attempt
பிரபல பெங்காலி நடிகரான சைபல் பட்டாச்சார்யா என்பவர் பெங்காலி மொழி திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்திருக்கின்றார். இவரது நடிப்பில் உருவான பிரோத்ஹோமா காதம்பினி எனும் பெங்காலி தொடர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
கல்கத்தாவில் நடிகர் சைபல் பட்டாச்சாரியா தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இத்தகைய நிலையில் சைபல் பட்டாச்சார்யா சமீபத்தில் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக ஒரு வீடீயோவை முகநூலில் வீடியோ வெளியிட்டுவிட்டு கத்தியை எடுத்து தன்னைத்தானே குத்தி கொலை செய்ய முயன்றுள்ளார்.
ரத்த வெள்ளத்தில் மிதந்த அவரை காயத்துடன் அவரது குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கே மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுகுறித்து போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரித்ததில் சமீப காலமாகவே சைபல் பட்டாச்சார்யாவுக்கு எந்த பட வாய்ப்புகளும் இல்லை. எனவே, அவர் விரக்தியில் மனமுடைந்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார் என்று கண்டறிந்துள்ளனர்.
English Summary
Bengal actor suicide attempt