அத்திவரதரை தரிசனம் செய்த நயன்தாரா! ஐயர் செய்த காரியத்தால் பரபரப்பு!! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை அத்திவரதர் குளத்திலிருந்து எழுந்தருளி தரிசனம் கொடுத்து வருகிறார். அந்த வகையில் இந்த வைபவம் கடந்த ஜூலை 1-ஆம் தேதி தொடங்கியது.

மொத்தம் 48 நாட்கள் நடக்கும் இந்த வைபவத்தில் 24 நாட்கள் சயன கோலத்தில் காட்சியளித்தார். சயன கோலம் முடிந்து நின்ற கோலத்தில் கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் காட்சியளித்து வருகிறார்.

இன்று மட்டுமே அத்திவரதர் தரிசனத்தை காண முடியும் என்ற நிலையில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஆகஸ்ட் 16-ம் தேதியுடன் பக்தர்களுக்கு அத்திவரதர் தரிசன அனுமதி நிறைவடைகிறது.

ஆகஸ்ட் 16-ம் தேதி இரவு 10 மணிக்குள் கிழக்கு கோபுரத்துக்குள் எத்தனை பேர் வந்தாலும் அவர்கள் அத்திவரதரை தரிசிக்கலாம். ஆகஸ்ட் 17-ம் தேதி ஆகம விதிப்படி உரிய பூஜைகளைச் செய்து அத்திவரதர் மீண்டும் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்படுவார். இதனால் ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான பக்தர்கள் அத்திவரதரை தரிசித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று அத்திவரத்தரை காண நடிகை நயன்தாரா சென்றார். அவருடன் காதலன் விக்னேஷ் சிவம் சென்றுள்ளார். நயன்தாரா அத்திவரத்தரை சரிசனம் செய்யும் போது, அங்கு உள்ள ஐயர் ஒருவர் போட்டோ எடுப்பது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அப்புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் ஐயரை திட்டி தீர்த்து வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

athivaradar tharithanam for nayanthara


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->