அஜீத்தை பார்த்தால் இதை செய்வேன்.. அமீர்கான் பேட்டியால் உற்சாகமடைந்த தல ரசிகர்கள்.!
Ameer khan about ajithkumar
அமீர்கான் நடிப்பில் வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் தான் லால் சிங் சத்தா திரைப்படம். இந்த படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது.
இது குறித்த செய்தியாளர் சந்திப்பின்போது உதயநிதியிடம், 'இந்தி தெரியாது போடா' என்று டீசர்ட் அணிந்து எதிர்ப்பு தெரிவித்த நீங்கள் தற்போது இந்தி படத்தை தமிழகத்தில் அனுமதிக்கலாமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு உதயநிதி, "இந்தி தெரியாது போடா என்பது இந்தி திணிப்பிற்கு எதிரானதுதானே அன்றி, இந்தி மொழியை கற்றுக் கொள்ளக் கூடாது என்றோ, இந்தி படத்தை தமிழகத்தில் வெளியிட கூடாது என்றோ அர்த்தமாகாது.
இந்தி மொழியை விருப்பப்பட்டு யாரேனும் கற்றுக் கொண்டால் அதில் எனக்கு எந்த விதமான முரண்பாடும் இல்லை. ஆனால், அதை திணிக்க முயல்வது தான் திமுகவின் கொள்கைக்கு எதிரானது. மொழியைத் தாண்டி எனக்கு அமீர் கானின் நடிப்பு மிகவும் பிடிக்கும். இது ஒரு ஃபேன்பாய் தருணம் என்று கூட சொல்லலாம்." என உதயநிதி தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், அமீர் கானிடம் அஜித் குறித்து, "நீங்கள் அஜீத்தை நேரில் பார்த்தால் என்ன கேள்வி கேட்பீர்கள்." என்று கேள்வி எழுப்பபட்டுள்ளது. அதற்கு அமீர் கான், "அஜித்தின் படங்களை பார்க்கும் போது எனக்கு ஒரு எனர்ஜி ஏற்படும். அது எப்படி.? என்று அவரிடம் கேட்பேன்." என தெரிவித்துள்ளார்.
English Summary
Ameer khan about ajithkumar