விஜய் தேவரகொண்டாவின் காதலி இவரா? ராஷ்மிகா மந்தனாவுக்கு டும்..டும்..டும்..! - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கும், நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளதாக சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வளம் வரும் விஜய் தேவரகொண்டாவுக்கு திருப்புனையாக அமைந்த படம் ‘அர்ஜுன் ரெட்டி’.

அதன்பின் நடிகை ராஷ்மிகா மந்தனாவுடன் நடித்த கீதா கோவிந்தம் மொத்த இந்திய ரசிகர்களையும் திரும்பி பார்க்கவைத்தது.

இருவரின் நடிப்பும், ஜோடி பொருத்தமும் குடும்பங்கள் வரை பேசப்பட்டன. தொடர்ந்து டியர் காம்ரெட் படத்திலும் இருவரும் ஜோடியாக நடித்தனர்.

கீதா கோவிந்தம் படத்திற்கு பின்பு நடிகர் விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகா மந்தனாவும் காதலித்து வருவதாக பேசப்பட்டது. இப்போதும் அதேபோல பேச்சு அடிபடுவது உண்டு.

இந்த நிலையில், விஜய் தேவரகொண்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘நிறைய நடக்கிறது. ஆனால், இந்த ஒன்று உண்மையிலேயே சிறந்தது. விரைவில் அறிவிக்கிறேன்’ என காதலர்கள் இவர்கள் கைகோர்த்திருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டிருந்தார்.

இந்த பதிவை தொடர்ந்து, விரைவில் விஜய் தேவரகொண்டா தனது காதலி யார் என்பது குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்பது உறுதியாகிவிட்டது.

அதற்குள், விஜய் தேவரகொண்டாவுக்கும், ராஷ்மிகா மந்தனாவுக்கும் பிப்ரவரி இரண்டாவது வாரம் நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளதாக சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. எப்போதும் போல இருவருமே இதுகுறித்து இருவரும் எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலையும் இதுவரை வெளியிடவில்லை.

எது எப்படியானாலும் இன்னும் சில தினங்களில் நடிகர் விஜய் தேவரகொண்டாவின் காதலி யார் என்பதை அவரே வெளிட்டுவிடுவார். அது ராஷ்மிகா மந்தனாவாக இருந்தால், தெலுங்கு திரையுலகத்திற்கு மகிழ்ச்சி கொண்டாட்டம் தான் என்பதில் ஐயமில்லை.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress Rashmika Mandanna and Vijay Devarakonda some news viral


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->