"19 வயசுலயே இப்படியெல்லாம் நடக்கும்னு தெரியாது." யாஷிகா உருக்கமான பதிவு.!  - Seithipunal
Seithipunal


விஜய் டிவியில் ஒளிபரப்பாகி அதிகம் ரசிகர்களை கவர்ந்த நிகழ்ச்சிதான் பிக் பாஸ். இந்த பிக் பாஸ் சீசன் இரண்டாவது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். 

இவர் நிறைய அடல்ட் படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமடைந்தார். கவர்ச்சியை பிரதானமாக கொண்ட யாஷிகா தற்போது சில படங்களில் கமிட்டாகியிருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு யாஷிகா தனது தோழி மற்றும் ஆண் நண்பர்களுடன் சென்றபோது விபத்து ஏற்பட்டு படுகாயமடைந்தார்.

சிகிச்சைக்கு பிறகு தற்போது அவர் மீண்டு வந்துள்ளார். சமூக வலைதளங்களில் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இயங்கி வருவார். தற்போது யாஷிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். 

அதில், "தனது 19 வயதில் எனது பெற்றோரின் கனவை நிறைவேற்றுவேன் என்று எதிர்பார்க்கவில்லை. எனக்கு 19 வயதாகும் போது ஒரு சொந்த வீட்டை என் பெயரில் பதிவு செய்தேன். பல வருடங்களுக்கு பின்பு நாங்கள் அந்த வீட்டிற்கு குடி பெயர நேரம் வந்துள்ளது." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor yashika about His own House


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->