மேடையில் மிரண்டு போன சிவகார்த்திகேயன் - ரசிகரின் ஆர்வத்தால் நடந்த சம்பவம்.! - Seithipunal
Seithipunal


ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பொங்கல் பண்டிகைக்கு வெளியான படம் ‘அயலான்’. இந்தப் படம் தமிழில் வெளியானதைத் தொடர்ந்து தெலுங்கிலும் நாளை வெளியாக உள்ளது. 

இந்த நிலையில், நேற்று ஹைதராபாத்தில் படத்திற்கான ஈவென்ட் நடைபெற்றுள்ளது. அதில், நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டு பேசினார். அப்போது ரசிகர் ஒருவர் திடீரென மேடை மீது ஏறி சிவகார்த்திகேயன் மீது பாய்வது போல் சென்றார். 

இதைப் பார்த்து சற்று பதறிப்போனார் சிவா. அப்படி ஆர்வமாக மேடைக்குச் சென்ற அந்த ரசிகர், சிவகார்த்திகேயனுடன் செல்ஃபி எடுக்க வேண்டும் என்று அடம்பிடித்தார். 
அவரை அங்கிருந்தவர்கள் மேடையில் இருந்து அகற்ற முற்பட்டார்கள். 

ஆனால், நடிகர் சிவகார்த்திகேயன் ரசிகரின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் விதமாக, அவரை நிறுத்தி செல்ஃபி எடுக்கச் சொல்லிவிட்டு பிறகு அனுப்பினார். இது தொடர்பான வீடியோ எஸ்கே ரசிகர்கள் மத்தியில் தற்போது வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor sivakarthikeyan shocked fans performance in stage


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->