நடிகர் சந்தானத்தால் தயாரிப்பாளர் மருத்துவமனையில் உள்ளார்-தயாரிப்பாளர் கே.ராஜன்.!
actor santhanam film producer admitted in hospital
நடிகர் சந்தானத்தின் டகால்டி மற்றும் சர்வர் சுந்தரம் உள்ளிட்ட இரு படங்களும் 31 ஆம் தேதி வெளியாக இருந்த சூழ்நிலையில், இரு தயாரிப்பாளர்களுக்கும் சமரசம் செய்து வைத்த பாரதிராஜா தலைமையிலான தயாரிப்பாளர் சங்க கூட்டுக்குழுவினர். கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்திப்பு நடத்தினர், அப்போது பேசிய பாரதிராஜா, தன்னை பார்த்ததும் டகால்டி மற்றும் சர்வர் சுந்தரம் படங்களின் இரு தயாரிப்பாளர்களும் கத்திகளை கீழே போட்டு விட்டதாக தெரிவித்தார். மேலும் டகால்டி படம் வருகிற 31ந்தேதியும், சர்வர் சுந்தரம் படம் பிப்ரவரி 14ந் தேதியும் வெளியாக உள்ளதாக தெரிவித்தார்.
இதையடுத்து, தயாரிப்பாளர் கே.ராஜன் பேசியதாவது, சந்தானம் கதாநாயகனாக நடித்துவரும் ஓடி ஓடி உழைக்கணும் என்ற படம் சம்பள பிரச்சனையால் அந்த படம் பாதியில் நிற்பதால் தயரிப்பாளர் வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனவே சந்தானம் சம்பளம் வாங்காமல் அந்த படத்தை நடித்துக் கொடுத்தால் படம் வெளிவரும் என தெரிவித்தார்.
English Summary
actor santhanam film producer admitted in hospital