இயக்குநர் சற்குணத்துடன் மீண்டும் கூட்டணி அமைத்த லைகா.! அடுத்த பிளான் என்னவா இருக்கும்?. - Seithipunal
Seithipunal


திரையுலகில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர்களில் ஒருவர் அதர்வா. கடைசியாக 'ட்ரிகர்' என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களையே பெற்றது. இதற்கிடையே இவர் 'அட்ரஸ்', 'ஒத்தைக்கு ஒத்த' உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், அதர்வா நடிப்பில் உருவாகி வரும் புதிய படமான "பட்டத்து அரசன்" என்ற படத்தின் அறிவிப்பும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி உள்ளது. அதன்படி, லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். அதுமட்டுமின்றி இந்த படத்தில் அதர்வாவுடன் முன்னணி நடிகரான ராஜ்கிரணும் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 
 

இந்தப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்க்கும் போது கிராமத்தை முதன்மையாக வைத்து எடுத்துள்ள படம் போல் தோன்றுகிறது. இதற்கு முன்னதாக கடந்த 2015 ஆம் ஆண்டு சற்குணம் இயக்கத்தில் அதர்வா நடிப்பில் வெளியான படம் சண்டிவீரன். இந்தப்படம் மற்றும் அதன் பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அந்த வகையில் இந்த படமும் அமையும் என்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
 
தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களைத் தயாரித்து வரும் லைகா நிறுவனம் தற்போது, கமலின் 'இந்தியன்', ரஜினியின் 'லால் சலாம்', வடிவேலுவின் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்', ராகவா லாரன்ஸின் 'சந்திரமுகி 2', மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன் 2' உள்ளிட்ட படங்களை தயாரித்து வருகிறது.

இந்நிலையில், லைகா நிறுவனம் தேசிய விருது பெற்ற இயக்குநரான சற்குணத்துடன் கூட்டணி அமைத்துள்ளது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு சற்குணம் இயக்கத்தில் வெளியான 'வாகை சூடவா', சிறந்த தமிழ் படம் என்ற பிரிவில் தேசிய விருது பெற்றது குறிப்பிடத்தக்கது ஆகும்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor adarva next movie pattathu arasan first look release


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->