சினிமாவில் ரீ- என்ட்ரி கொடுக்கும் அப்பாஸ்.. இந்த முறை ஹீரோவா இல்ல.! அவரே வெளியிட்ட தகவல்.!
Abbas re entry In Kollywood cinema
1990-களில் தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருந்து வந்தவர் நடிகர் அப்பாஸ். திடீரென அவர் சினிமாவில் இருந்து விலகி நியூசிலாந்து நாட்டிற்கு சென்றுவிட்டார். அங்கு அவர் ஒரு பைக் மெக்கானிக் வேலை செய்ய தொடங்கினார். மேலும், பெட்ரோல் பங்கிலும் வேலை பார்த்தார்.
இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அவரது ரசிகர்களை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆனால், இது பற்றி எல்லாம் அப்பாஸ் கவலைப்படாமல் நான் நடிகனாக இருந்ததை விட இப்போதுதான் நிம்மதியாக இருக்கிறேன் என்று கூறி தனது ரசிகர்களுக்கு சமூக வலைதளங்களின் மூலம் பதில் கொடுத்தார்.
இந்த நிலையில், மீண்டும் தற்போது சென்னைக்கு திரும்பிய அப்பாஸ் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர், "தனிப்பட்ட சில காரணங்களுக்காக சினிமாவில் இருந்து விலகி இருந்தேன். ஏதாவது ஒரு வேலை செய்ய வேண்டும் என்று தான் நியூசிலாந்துக்கு சென்று மெக்கானிக்காக பணியாற்றினேன்.
மீண்டும் இந்தியாவிற்கு வந்த என்னை சினிமா ஏற்றுக்கொள்ளும் என நம்புகிறேன். எனக்குள் இன்னமும் அந்த நடிப்பு தீ எரிந்து கொண்டு தான் இருக்கிறது. எனது அனுபவம் முன்பை விட மேலோங்கி இருக்கிறது. ரசிகர்கள் இன்னமும் என் மீது அன்பு வைத்திருப்பதை நான் புரிந்து கொண்டேன். அவர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்.
இந்த வயதில் ரொமான்டிக் ஹீரோவாக வேண்டும் என்று நினைக்கவில்லை. ஒரு ரசிக்கத்தக்க வில்லனாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். விரைவில் அது நடக்கும் என்றும் எதிர்பார்க்கிறேன். ரசிகர்கள் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் என் நடிப்பு திறமையை ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்." என்று கூறியுள்ளார்.
English Summary
Abbas re entry In Kollywood cinema