வோடபோன் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியான செய்தி! இந்தியாவை விட்டு வெளியேறும் வோடபோன்?
vodafone leaving india
வோடபோன் தொலைத்தொடர்பு நிறுவனம், இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. வோடபோன் நிறுவனம் இந்தியாவில் தனித்து இயங்கிய நிலையில், சில மாதங்களுக்கு முன்பு, ஐடியா நிறுவனத்துடன் இணைந்து வோடபோன்-ஐடியா என்ற பெயரில் வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கி வருகிறது.
நடப்பு நிதியாண்டின், முதல் இரண்டு காலாண்டுகளாக, தலா 4 ஆயிரத்து 800 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பை வோடபோன் நிறுவனம் சந்தித்துள்ளார். மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய தொலைத்தொடர்பு கட்டணத்தில் 28 ஆயிரத்து 306 கோடி ரூபாயை நிலுவையாக வோடபோன் நிறுவனம் வைத்திருக்கிறது.
ஜியோ வருகையால், நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், அடுத்தடுத்த நெருக்கடியால் வோடபோன் நிறுவனத்தின் நஷ்டம், தொடர்ந்து அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், வோடபோன் நிறுவனம், தனது இந்திய சேவையை நிறுத்திக்கொண்டு, நாட்டை விட்டு வெளியேறக்கூடும் என தொலைத்தொடர்பு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றனர்.