ஒரே நாளில் தங்கம் விலை ரூ.680 உயர்வு.! - Seithipunal
Seithipunal


வாரத்தின் முதல் நாளான இன்று சென்னையில் ஒரு பவுன் ஆபரண தங்கத்தின் விலை 680 ரூபாய் உயர்ந்துள்ளது.

தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. சர்வதேச முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது கவனம் செலுத்தி அதில் முதலீடு செய்வதால் தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது. 

தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரிப்பதன் காரணமாகவே தங்கத்தின் விலை கடுமையான உயர்வை சந்தித்து வருவதாக தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். 

இன்று 22 காரட் ஆபரண தங்கம், கிராமுக்கு 85 ரூபாய் உயர்ந்து 5055 ரூபாய்க்கும், ஒரு பவுன் 680 ரூபாய் உயர்ந்து 40, 440 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. கடந்த இரு தினங்கள் விடுமுறை நாட்கள் என்பதால் தங்கத்தின் விலையில் மாற்றம் இல்லாத சூழ்நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்று ஒரே நாளில் 680 ரூபாய் உயர்ந்திருக்கிறது.

வரும் நாட்களிலும் தங்கத்தின் விலை மேலும் உயரும் என்றே வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Today gold rate


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->