ஒரே நாளில் தங்கம் விலை ரூ.680 உயர்வு.! - Seithipunal
Seithipunal


வாரத்தின் முதல் நாளான இன்று சென்னையில் ஒரு பவுன் ஆபரண தங்கத்தின் விலை 680 ரூபாய் உயர்ந்துள்ளது.

தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. சர்வதேச முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது கவனம் செலுத்தி அதில் முதலீடு செய்வதால் தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது. 

தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரிப்பதன் காரணமாகவே தங்கத்தின் விலை கடுமையான உயர்வை சந்தித்து வருவதாக தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். 

இன்று 22 காரட் ஆபரண தங்கம், கிராமுக்கு 85 ரூபாய் உயர்ந்து 5055 ரூபாய்க்கும், ஒரு பவுன் 680 ரூபாய் உயர்ந்து 40, 440 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. கடந்த இரு தினங்கள் விடுமுறை நாட்கள் என்பதால் தங்கத்தின் விலையில் மாற்றம் இல்லாத சூழ்நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்று ஒரே நாளில் 680 ரூபாய் உயர்ந்திருக்கிறது.

வரும் நாட்களிலும் தங்கத்தின் விலை மேலும் உயரும் என்றே வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Today gold rate


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->