மீண்டும் உயரத் தொடங்கியது பெட்ரோல் மற்றும் டீசல் விலை!
petrol and diesel price septem 21
எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை நிர்ணயித்து வந்தது. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை கைவிடப்பட்டு, நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது.
இந்தநிலையில் பெட்ரோல் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வந்தது. இதனால் மக்களுக்கு தேவையயன அத்தியாவசிய பொருட்களின் விளையும் பல மடங்கு உயர்ந்து வந்தது.
தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்திக்கொண்டு இருந்த நிலையில் மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலையானது அதிகரிக்க தொடங்கியது.
இந்நிலையில், இன்றைய பெட்ரோல் விலை நேற்றைய விலையிலிருந்து 31 காசுகள் உயர்ந்து லிட்டர் ரூ.76.24 காசுகளாகவும் ஆகவும், அதேபோல் டீசல் விலை நேற்றைய விலையிலிருந்து 26 காசுகள் உயர்ந்து லிட்டர் ரூ.70.33 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
English Summary
petrol and diesel price septem 21