ரூ.42 ஆயிரத்தை தொட்ட தங்கத்தின் விலை.. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்.! - Seithipunal
Seithipunal


நாளுக்கு நாள் தமிழகத்தில் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் அனைவரும் மிகவும் குழப்பத்தில் இருந்து வருகிறார்கள்.ஒவ்வொருநாளும் மக்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது.

அந்தவகையில், நேற்று சென்னையில் கிராம் ஒன்றுக்கு 6 ரூபாய் அதிகரித்து 5,236 ரூபாயாகவும், சவரன் ஒன்றுக்கு 48 ரூபாய் அதிகரித்து 41,888 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 14 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் 5,250 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் சவரனுக்கு 112 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 42,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி 74 ரூபாயாகவும், ஒரு கிலோ வெள்ளி 74,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

13.03.2022 gold and silver price


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->