வாழ்க்கையின் முதற்படி.. முக்கியபடி.! அன்பும் - அரவணைப்பும்- பாசமும்- ஏக்கமும் நிறைந்த தாம்பத்தியம்..!!
couple enjoy is first step for future life
நமக்கு யாரும் தாம்பத்தியத்திற்கான கலைகளை கற்றுக்கொடுப்பதும் இல்லை., கற்றுக்கொள்வதும் இல்லை. இதனை கேட்டோம் என்றால் விலங்கினத்திற்கு யார் சொல்லி கொடுக்கிறார்கள் என்ற விதண்டாவாத பேச்சுக்கள் மட்டும் தான் எழும். விலங்குகளை பொறுத்த வரையில் எவ்வாறு பிற விலங்குகள் செயல்பாடுகளை செய்கிறதோ? அதனையே கண்டு கற்றுக்கொள்ளும். இது ஒரு புறம் இருக்க தாம்பத்திய கலையை கற்று தேர்ந்த மற்றும் படித்து தெரிந்த நபர்களும் பாலியல் ரீதியான பிரச்சனைகளுக்கு மருத்துவரை நாடுவதும் இருந்து வருகிறது.
பசி மற்றும் தூக்கம்., பாலுணர்ச்சி என்ற மூன்றும் மனிதனின் இன்றிமையாத தேவைகளுள் ஒன்றாகும். பசி மற்றும் தூக்கம் இரண்டும் உயிரையும்., உடலையும் பாதுகாத்து கொள்ள எவ்வாறு முக்கியமானதோ... இதனைப்போன்று பாலுணர்ச்சி என்பது சந்ததியை உருவாக்க முக்கிய தேவைகளுள் ஒன்றாகும். இந்த விசயத்திற்கு ஆங்கிலத்தில் Sexual behaviour is a learner behaviour என்ற வாக்கியமும் பொன்மொழியாக உள்ளது. எந்த ஒரு விஷயத்தையும் கற்றுக்கொள்ளாமல்., திரைப்படம் மற்றும் ஆபாச திரைப்படத்தில் பார்த்து ஏங்கி தவிப்பதில் எந்த விதமான பயனும் இல்லை.
திரைப்படங்கள் மற்றும் ஆபாச இணையத்தில் இருக்கும் வீடியோ காட்சிகள் அனைத்தும் செயற்கையாக பாலியல் நடிகர்களை கொண்டு எடுப்பவை ஆகும். இந்த காட்சிகளில் கட்டப்படும் தாம்பத்திய நிலைகள் மற்றும் தாம்பத்தியம் உண்மையானதே அல்ல.. அனைத்தும் பாலியல் நடிகர்களை கொண்டு வியாபார ரீதியாக எடுக்கப்படுகிறது. தம்பதிகள் திருமணத்திற்கு பின்னர் மனம் விட்டு பேசிக்கொள்ள வேண்டியது என்பது அவசியமான ஒன்றாகும். தம்பதிகளின் உடலும் - மனதும் ஒத்துழைக்கும் பட்சத்தில் மட்டுமே தாம்பத்தியம் இன்பத்துடன் இருக்கும்.
தாம்பத்தியத்தில் வலுக்கட்டாய உறவு மற்றும் அசாதாரண நிலைகள் என்று மேற்கொள்ளப்படும் தாம்பத்தியம் பெண்ணிற்கு வெறுப்பை ஏற்படுத்தி., தாம்பத்தியம் குறித்த அதிகளவு பயத்தை ஏற்படுத்திவிடும். தாம்பத்தியத்தில் உற்சாகம் மற்றும் மன ஒத்துழைப்பின் போது மட்டுமே பெண்ணுறுப்பில் தாம்பத்தியத்திற்கு இளகாகக்கும் திரவமானது சுரக்கும். இதன் மூலமாக அமைதியான மகிழ்ச்சியுடன் கூடிய தாம்பத்தியம் சாத்தியப்படும். மேலும்., தாம்பத்திய நேர வலி மற்றும் எரிச்சல் ஏற்படாமல் இருக்கும்.
தாம்பத்தியம் குறித்த புதிய அனுபவனங்களை கற்றுக்கொள்ள தயக்கம் இருக்க கூடாது. தாம்பத்தியத்தில் பெரும்பாலானோர் வேகத்தை காட்டி., அதன் இன்பத்தை முழுமையாக அனுபவிக்காமல் இருக்கின்றனர். தாம்பத்தியத்தை பொறுத்த வரையில் எந்த ஒரு விஷயத்தையும் கடமைக்கு செய்யாமல்., வாழ்நாள் தேவைகளுள் ஒன்றான தாம்பத்தியம் என்ற செயலை அனுபவித்து மகிழ்ச்சியுடன் செய்ய வேண்டும். இதில் மூன்று படி நிலைகள் உள்ளது. அவையாவது., Fore Play, Play, After Play என்று வகைப்படுத்தலாம்.
தாம்பத்தியத்தில் fore play என்பது., தாம்பத்தியத்தின் ஆரம்ப நிலை என்றும் அழைக்கலாம். தாம்பத்தியத்தில் ஈடுபடுவதற்கான உணர்ச்சி கிடைக்கப்பெறும் நிகழ்வே fore play என்று அழைக்கப்படுகிறது. இருவருக்கும் தாம்பத்தியத்திற்கான உணர்ச்சிகள் ஒரே நேரத்தில் ஏற்படாது. ஒருவருக்கு வந்திருக்கும் உணர்ச்சியை மற்றொருவருக்கும் ஏற்படுத்த உணர்ச்சி வந்தவர் செயலாற்ற வேண்டும். தம்பதிகள் இதழோடு இதழை சேர்த்து முத்தம் கொடுப்பது., காதுகளின் மடல்களை கடிப்பது., தலைமுடியினை வருடுவது., கொஞ்சுவது மற்றும் கால்களின் விரல்களை வைத்து தடவுவது போன்றவை fore play ஆகும்.
இந்த fore play மூலமாக மனம் - உடல் - தாம்பத்திய உறுப்புக்கள் தாம்பத்தியத்திற்கு தயாராகிவிடும். இதனால் ஆணின் ஆண்குறி விறைப்புத்தன்மை அடைவதும்., பெண்ணிற்கு பெண்ணுறுப்பில் தாம்பத்திய திரவம் சுரப்பதும் நிகழ்கிறது. பெண்ணுறுப்பில் சுரக்கும் திரவம் வலுக்கும் தன்மையுடைய பொருளாக இருப்பதால்., ஆணின் குறியானது புணர்ச்சியின் போது எளிதாக சென்று வருகிறது. இதனால் பெண்ணிற்கு தாம்பத்திய நேரத்தில் பிறப்புறுப்பில் ஏற்படும் வலி மற்றும் எரிச்சல் போன்றவை குறைகிறது. பெண்ணுறுப்பில் சரியான திரவ சுரப்பு இல்லாத பட்சத்திலேயே தாம்பத்திய நேரத்தில் பெண்ணிற்கு வலி ஏற்படும்.
ஆண்களை பொறுத்த வரையில் Visual Stimulation என்ற காட்சிகளின் மூலமாக அதிகமாக கவருவதற்கு வாய்ப்புகள் அதிகம். அழகான பெண்களை பார்க்கும் பட்சத்திலேயே ஆணின் மனது கொண்டாட்டத்திற்கு உள்ளாகிவிடும். பெண்ணென்பவள் இதற்கு நேர்மறையாக இருப்பவள். பெண்களை பொறுத்த வரையில் ஆணின் எண்ணங்கள் மற்றும் சிந்தனையின் அடிப்படையிலேயே கவரப்படுவாள். இதன் காரணமாக தாம்பத்தியத்தை உடனடியாக துவங்காமல் சின்ன சின்ன கதைகள் மற்றும் அன்பான தீண்டல்கள் போன்று செய்து உணர்ச்சியை அதிகப்படுத்துவது அவசியமான ஒன்றாகும்.
நடுநிலையாக இருக்கும் play என்பது ஆண் - பெண் உணர்ச்சியின் உச்சக்கட்டத்தில் தாம்பத்தியத்தில் ஈடுபடுவதாகும். இந்த சமயத்தில் ஏற்படும் உறுப்புகளுக்கு இடையேயான உரசல்கள் மற்றும் உடலின் உரசல்கள் தம்பதிகளுக்கு நல்ல வெப்பத்தையும்., கதகதப்பையும்., அரவணைப்பையும் ஏற்படுத்தும். இதன் மூலமாக ஏற்படும் உச்சகட்டதால் தம்பதிகள் அனுபவிக்கும் இனம் புரியாத அன்பும் - பாசமும் - அரவணைப்பும் வாழ்க்கைக்கு முக்கிய படியாகும். இதற்கு பின் உள்ள after play என்பது தாம்பத்தியம் முடிந்த பின்னர் செய்யும் கட்டியணைத்தல்., முத்த பரிமாற்றம் மற்றும் மனம் விட்டு பேசுவது போன்றதாகும். முக்கியமாக தாம்பத்தியம் நிறைவு பெற்றவுடன் தூங்க செல்வது நல்லதல்ல...
Tamil online news Today News in Tamil
English Summary
couple enjoy is first step for future life