உக்ரைனில் ஹெலிகாப்டர் விபத்து - உள்துறை அமைச்சர் உட்பட 16 பேர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


உக்ரைன் தலைநகர் கிவ் புறநகர் பகுதியில் உள்ள மழலையர் பள்ளி அருகே ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் உக்ரைன் உள்துறை அமைச்சர் உட்பட 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான போர் கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதியிலிருந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்போரில் உக்ரைனின் பல்வேறு நகரங்கள் சேதமடைந்துள்ளது.

இந்நிலையில் உக்ரைன் நாட்டின் உள்துறை அமைச்சர் டெனிஸ் மொனாஸ்டிர்ஸ்கி, உட்பட சில மூத்த அதிக அதிகாரிகள் இன்று ஹெலிகாப்டரில் சென்றபோது தலைநகர் கீவ் நகருக்கு 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ப்ரோவெரிவில் மழலையர் பள்ளி அருகே ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த பயங்கர விபத்தில் உக்ரைன் உள்துறை அமைச்சர், இரண்டு பள்ளி குழந்தைகள் உட்பட 16 பேர் உயிர் இழந்துள்ளனர். மேலும் 10 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த ஹெலிகாப்டர் விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ukraine interior minister among 16 dead in helicopter crash


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->