கடல் சீற்றம்: திருச்செந்தூர் கடலில் குளிக்க தடை! பக்தர்கள் ஏமாற்றம்.!
Thiruchendur Sea rage Devotees bathing banned
கடல் சீற்றம் அதிகமாக இருப்பதால் திருச்செந்தூர் கடற்கரையில் பக்தர்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடலில் அலையில் வேகம் மிக அதிகமாக இருப்பதால் கோவில் நிர்வாகம் சார்பில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் கடலில் யாரும் குளிக்க கூடாது என போலீசார் ஒலிபெருக்கி மூலம் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். கோடை விடுமுறை மற்றும் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.
பக்தர்கள் அதிக அளவில் குவிந்துள்ள நிலையில் கடலில் புனித நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது பக்தர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Thiruchendur Sea rage Devotees bathing banned