16 வயது சிறுமியின் உயிரை பறித்த மாத்திரை - நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


இங்கிலாந்து நாட்டில் உள்ள லின்கன்ஷையர் பகுதியைச் சேர்ந்த 16 வயதான பள்ளிச்சிறுமி லேலா கான் என்பவருக்கு மாத விடாய் கால வயிற்று வலி தொடங்கியது.  உடனே லேலாவின் தோழிகள் வலியை குறைப்பதற்கு கருத்தடை மாத்திரை எடுத்து கொள்ள ஆலோசனை தெரிவித்தார்கள்.

அதன் படி லேலாவும் தொடர்ந்து மாத்திரையை வாங்கி சாப்பிட்டு வந்ததால், வயிற்று வலியுடன் தலைவலியும் சேர்ந்து கொண்டது. மேலும், அவர் அந்த வாரத்தின் இறுதியில் 30 நிமிடங்களுக்கு ஒரு முறை வாந்தி எடுக்க தொடங்கினார்.

இதையடுத்து, அவரது குடும்பத்தினர் லேலாவை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இரைப்பை குடல் அழற்சி நோயால் சிறுமி தாக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, குடும்பத்தினர் லேலாவை மீண்டும் வீட்டிற்கு அழைத்து வர லேலாவின் நிலை மறு நாள் மோசமடைய தொடங்கி, வலியில் அலற தொடங்கினார். இதைத்தொடர்ந்து, 
லேலாவை குடும்பத்தினர் மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றபோது அங்கு அவருக்கு சிடி ஸ்கேன் பரிசோதனை நடத்தயப்பட்டது. அதில், அவருக்கு மூளையில் ரத்த கட்டி இருப்பது கண்டறியப்பட்டது.

அந்தக் கட்டியை அகற்ற லேலாவிற்கு மூளை அறுவை சிகிச்சை நடைபெற்றது. ஆனால், லேலா சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்து விட்டார். லேலாவின் குடும்பத்தினர் அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்கினர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sixteen years old girl died in england


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->