பல்வேறு நாடுகளில் தடை எதிரொலி! ரஷ்யாவின் 6.2 கோடி பேரல் கச்சா எண்ணெய் கப்பல்களில் தேக்கம்.! - Seithipunal
Seithipunal


பல்வேறு நாடுகள் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்தியதால் 6.2 கோடி பேரல் கச்சா எண்ணெய் கப்பல்களில் தேங்கியுள்ளது.

ரஷ்யா உக்ரைன் இடையை தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு மேலாக போர் நடந்து வருகிறது. இதனால் உக்ரைனின் பல நகரங்கள் சேதம் அடைந்தும், ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

ரஷ்யாவின் தாக்குதலுக்கு பல்வேறு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் பல பொருளாதார தடைகளையும் ரஷ்யாவுக்கு விதித்துள்ளன.

இதைத்தொடர்ந்து சர்வதேச சந்தையில் பெயர் பெற்ற ரஷ்யாவின் யூரல் கச்சா எண்ணெய்யை, இறக்குமதி செய்வதை அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் நிறுத்தியுள்ளது.

உக்ரைன் ரஷ்யா போருக்கு முன்பு 80 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில் தற்போது 67 லட்சம் பேரலாக குறைந்துள்ளதால் 6.2 கோடி பேரல் கச்சா எண்ணெய் ரஷ்ய துறைமுகங்களில் தேங்கி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Russia crude oil stagnation


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->