இயற்கையின் கோரத்தாண்டவம்! பிலிப்பைன்சில் மழை வெள்ளத்துக்கு 115 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


இயற்கையின் சீற்றத்தால் பிலிப்பைன்ஸ் நாட்டில் மெகி புயலை அடுத்து பெய்த கனமழையால் 115 பேர் பலியாகியுள்ளனர்.

பிலிபைன்ஸ் நாட்டிலுள்ள லெய்டே உள்ளிட மாகாணங்களில் ஏற்பட்ட புயல் காரணமாக கன மழை வெளுத்து வாங்கியது. இதனால் சுற்றுவட்டார பகுதிகள் அனைத்தும் நீரில் மூழ்கியுள்ளன.

மேலும் அந்த நகரின் சில பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவு காரணமாக பல வீடுகள் சேதம் அடைந்து சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தங்கியுள்ளனர்.

இந்த கனமழையால் 115 பேர் பலியாகியுள்ளனர். மேலும் நிலச் சரிவுகளில் மாயமான பலரை தேடும் பணியில் மீட்புக் குழு ஈடுபட்டு வருகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Philippines country rain flood


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->