வெயிலின் தாக்கத்தால் எடுத்த அதிக தாகம்.! குளிர்பானத்தை திறந்தால் உள்ளே இருந்த மர்ம பொருள்.!! பதறிப்போன மாணவர்., வெளியான அதிர்ச்சி தகவல்.!!
in srilanka cool drinks inside hair is there
இலங்கையில் உள்ள பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் மாணவர் ஒருவர் வெயிலின் தாக்கத்தால் அவதியடைந்துள்ளார். இதனையடுத்து வெயிலால் ஏற்பட்ட தாகத்தை குறைப்பதற்கு கடைக்கு சென்று உணவருந்திவிட்டு., கடையில் இருக்கும் குளிர்பானத்தை வாங்கியுள்ளார்.
அந்த குளிர்பானத்தை மாணவர் குடித்த சமயத்தில் அதன் சுவையானது மாறுபட்டு இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த அவர்., பானத்தை உற்றுநோக்கையில் அதில் சளி போன்ற திரவத்துடன் தலைமுடியானது இருந்துள்ளது.
இதனை கண்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளான மாணவர் இது குறித்து கடையின் உரிமையாளரிடம் கேட்ட போது எந்த விதமான பதிலும் கூறாமல் இருந்துள்ளார். இதனையடுத்து உடனடியாக இந்த விஷயம் குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதனை அறிந்த அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து குளிர்பானத்தை கைப்பற்றி., விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க குளிர்பானத்தை அருந்துவதால் இது போன்ற சில பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதனை தவிர்ப்பதற்கு முடிந்தளவு இயற்கையான பழ வகைகளை சாப்பிட்டு வர வேண்டும் அல்லது பழச்சாறுகளை வீட்டிலேயே தயார் செய்து சாப்பிட வேண்டும்.
English Summary
in srilanka cool drinks inside hair is there