கணவன் மறுத்ததால், காதல் மனைவி தூக்கிட்டு தற்கொலை!. சோகச்சம்பவம்!. - Seithipunal
Seithipunal



திருவண்ணாமலை மாவட்டம், செஞ்சியை சேர்ந்த சித்ரா என்பவர் சென்னையில், தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த போது அதே நிறுவனத்தில் பணிபுரிந்த சகாயராஜ் என்பவரை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் சகாயராஜூக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்துள்ளது. இந்த விஷயம் அவரின் மனைவி சித்ராவுக்கு தெரியவந்தது. இந்த விஷயம் பற்றி தனது கணவர் சகாயராஜிடம் கேட்டுள்ளார். இதனால் தம்பதிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

சித்ரா எவ்வளவு கூறியும் அந்த பெண்ணுடனான தொடர்பை விட சகாயராஜ் மறுத்துள்ளார். மேலும் அந்த பெண்ணுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சித்ரா தற்கொலை செய்ய முடிவெடுத்து, தூக்கிட்டு தன்னை மாய்த்துக்கொண்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று மாலை சித்ரா, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக சகாயராஜ் மற்றும் அவர் பெற்றோர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சடலத்தை கைப்பற்றினர்.

ஆனால் சித்ராவின் தற்கொலை முடிவுக்கு சகாயராஜே காரணம் என அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளார். இதையடுத்து போலீசார் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

young girl suicide for her husband behaviour


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->