"தொப்பியை தொட்டால் வெட்டாமல் வேடிக்கை பார்ப்பார்களா?" விசிகவின் அறிக்கை!! கொந்தளிக்கும் உறவினர்கள்!! - Seithipunal
Seithipunal


பாமகவிற்கும், பாஜகவிற்கு எதிராக செயல்பட்டு ஸ்டாலினிடம் நற்பெயர் வாங்கி சீட்டுக்களை பெற திருமாவளவன் தன்னை திராவிட ஆதரவாளராகவும், இந்து மத எதிர்ப்பாளறாகவும் அடையாளப்படுத்தி கொண்டு செய்யும் செயல்கள் வரைமுறையற்றது என பலர் இணையத்தில் பதிவிடுவதை அனைவரும் அறிவர். 

பொன்.மாணிக்கவேலை சிறையில் அடைப்பது என துவங்கி, நடிகர் அஜித்தின் படத்தில் குளறுபடி ஏற்படுத்த முயன்றது என விடுதலை சிறுத்தைகள் சில வரைமுறையற்ற செயல்களில் இறங்கியது பாராளுமன்ற தேர்தலை குறிவைத்த நோக்கம் தான் என்கின்றனர்.

இந்நிலையில் மர்ம நபர்களால் கொல்லப்பட்ட ராமலிங்கத்தின் கொலையை நியாயப்படுத்தும் விதமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஒட்டுமொத்த மக்களின் வெறுப்பையும் பெற்றுவிட்டது விசிக. 

இதுகுறித்து, விடுதலை சிறுத்தை கட்சியின் முக்கிய நிர்வாகியான வன்னியரசு, வெளியிட்ட அறிக்கையில் கூறிருப்பதாவது:-

ராமலிங்கம் படுகொலையும்
ராமதாசின் அரசியலும்
……………………………………….
கும்பகோணம் ராமலிங்கம் படுகொலையை யாரும் 
ஞாயப்படுத்திட முடியாது.
கொலைக்குற்றவாளிகள் என்று சிலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
உண்மையான குற்றவாளிகள்
தண்டிக்கப்பட வேண்டும்.
இதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
ஆனால், இந்த படுகொலைக்கும் முன்னும் பின்னும் உள்ள அரசியல் மிக மோசமான பயங்கரவாத அரசியலாக இருப்பதை யாரும் பேச மறுக்கிறார்கள்.
கும்பகோணம் மற்றும் திருபுவனம் பகுதியில் மதமாற்றம் செய்ய வந்ததாகவும் அதை தடுக்க வந்த ராமலிங்கம் படுகொலை செய்யப்பட்டதாகவும் 
அவசரம் அவசரமாக அறிக்கை வந்தது.

வாழ்நாள் முழுக்க சாதிவெறியை ஊட்டி அரசியல் செய்து வரும் ராமதாசிடமிருந்து தான் இந்த 
அறிக்கை வந்தது.

காவல்துறையின் விசாரணை துவங்கும் முன்பே விசாரணையை எந்த கோணத்தில் விசாரணை போகவேண்டும் என்பதற்கான அறிக்கையாகத்தான் ராமதாசின் அறிக்கை அமைந்தது.
அவரது அறிக்கையை கையில் எடுத்துக்கொண்டு காத்திருந்த வெறிநாயை போல, 
பாஜக எச்.ராஜா போன்றோர் இப்போது இசுலாமியர்களுக்கு எதிராக
தமது ‘வன்ம நஞ்சை’கக்கி வருகிறார்கள்.

ராமலிங்கம் இசுலாமிய தோழர்களிடம் இடைமறித்து 
‘கலாட்டா’ செய்வதை அந்த வீடியோவில் பார்த்தவர்களுக்கு புரியும்.
இசுலாம் மார்க்கம் தொடர்பான துண்டறிக்கைகள்,திருக்குர்ரானோடு 
இருக்கிறார்கள். ராமலிங்கம் இசுலாமியர்களின் ‘தொப்பியை’ அநாகரீகமாக பறித்து மாட்டிக்கொள்கிறார்.
மேலும், திருநீறை எடுத்து இசுலாமியர்களின் நெற்றியில் பூசுகிறார்.
இத்தகைய ரவுடித்தனத்தை செய்ய ராமலிங்கத்துக்கு
யார் அனுமதித்தது?

இந்த இந்திய கண்டத்தில் மத பரப்புரைகளுக்கோ, மத தழுவலுக்கோ
எந்த தடையும் இல்லை. 
அது தான் சனநாயகம்.
தனிநபரின் மத நம்பிக்கையை பொறுத்தது. ஆனால், படுகொலைக்குள்ளான ராமலிங்கத்தின் செயல் மற்ற மதத்தவரின் நம்பிக்கைக்கு எதிரானதாகும். மத வெறியோ, 
மத திணிப்போ தான் தவறாகும்.
அந்த வீடியோவில் அப்படி எந்த திணிப்பும் இல்லை. 
ஆனால் ராமலிங்கம் இசுலாமியர்களிடம் மிக மோசமாக நடந்துள்ளார்.
இதை யாரும் சுட்டிக்காட்ட மறுக்கிறார்கள்.
படுகொலையை கண்டிப்பது போல,
ராமலிங்கத்தின் ரவுடித்தனத்தையும் கண்டிப்பது தான் சரியான பார்வையாக இருக்க முடியும்.

சமீபகாலமாக, 
இந்துத்துவ வெறியர்கள்
தேவாலயத்தில் புகுந்து பாதிரிமார்களை அடிப்பது, கிறித்தவர்களின் புனித நூலான பைபிளை எரிப்பது, 
பாதிரிமார்களை இழுத்து வந்து திருநீறு பூசுவது போன்ற ரவுடித்தனங்களை செய்து வருகிறார்கள்.
இப்படி செய்வதற்கு இந்த
‘இந்துத்துவ தீவிரவாதிகளுக்கு’
யார் அதிகாரம் தந்தது?
இதை யாரும் கண்டிக்க மாட்டார்களா?
பிரச்சனைகளுக்கு முன்னதாகவே
கண்டறிந்து சரி செய்ய வேண்டாமா?

ஆனால், இதையெல்லாம் வசதியாக 
மறைத்து விட்டு பேசுகிறார் ராமதாசு.
அவரிடம் ஏற்கனவே ஊறிப்போயிருக்கிற
சுயநல சாதிவெறி இப்போது மதவெறியை தூண்டும் விதமாக அறிக்கை விடுகிறார். கொஞ்சம் கூட எந்தவித சமூகப்பொறுப்பும் இல்லாமல் வன்முறையை தூண்டி சேரிகளை தீக்கிரையாக்கிய ராமதாசு இப்போது முஸ்லீம் குடியிறுப்புகளை நோக்கி தீவட்டிகளை தூக்கி பிடிக்கிறார்.
இதற்கு எச்.ராஜா போன்ற கும்பல்
துனையாய் இருப்பது காத்திருந்த
வேட்டைநாய்களின் மன நிலை தான்.
சாதிவெறியும் மதவெறியும்
கூட்டு சேர்ந்து சமூக அமைதியை
சீர்குலைத்து அரசியல் ஆதாயம் தேடவே
இந்த கொலையை பயன்படுத்துகிறார்கள்.
இசுலாமிய சகோதரர்கள் இந்த 
குச்சிகொளுத்தி ராமதாசிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
– வன்னி அரசு
8.2.219
இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

திராவிடம் என்பது மதத்தை விட மனிதத்தை போற்ற வேண்டும் என்பதே தவிர, இந்து மதத்தை மட்டும் எதிர்ப்பது அல்ல. இஸ்லாமிய மதத்தின் குரானை மதிக்க சொல்லும் விசிக ஒரு போதும் இந்து மதத்தின் உணர்வுகளை மதித்து இல்லை. 

மாறாக இந்து கடவுள்களின் சிலையை திருமா உடைத்தது போன்ற செயல்களை செய்து இந்து மக்களின் உணர்வுகளை காயப்படுத்தியதை விடவும் ராமலிங்கம் தொப்பியை வாங்கி அணிந்து கொண்டு "உங்கள் மதத்தை நாங்கள் ஏற்கிறோம். எங்கள் மதத்தை ஏன் ஏற்க மறுக்கிறீர்கள்? நாமெல்லாம் சகோதர்கள்.

இந்தியா ஒரு சகிப்புத்தன்மை நிறைந்த நாடு, இங்க பிரிவினையை ஏற்படுத்த ஏன் நினைக்கிறீங்க?" என கேட்டது எந்த விதத்தில் தவறு? என ராமலிங்கத்தின் உறவினர்கள் ஆவேசமாக பேசுகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vck talk about ramalingam murder


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->