புகார் கொடுக்க வந்தவர்கள் மீதே பாய்ந்த வழக்கு! அதிரடி திருப்பம்!
புகார் கொடுக்க வந்தவர்கள் மீதே பாய்ந்த வழக்கு! அதிரடி திருப்பம்!
ஜாதி ரீதியாக பாகுபாடு காட்டப்படுவதாகக் கூறி தேனி மாவட்டத்தை சார்ந்த ரகு, கணேஷ் என்ற இரண்டு ஆயுதப்படை காவலர்கள் சென்னை டிஜிபி அலுவலகம் முன் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றனர். உடனிருந்த காவலர்கள் அவர்களை கட்டுப்படுத்தியதால் அசம்பாவிதங்கள் தடுக்கப்பட்டது.
இவர்களின் குற்றச்சாட்டுகளை தேனி மாவட்ட காவல்துறை அதிகாரிகள் மறுத்துள்ளனர். மேலும் தற்கொலைக்கு முயன்ற காவலர்கள் மீது இவர்கள் குற்றம் சாட்டினார்கள். அதனை தொடர்ந்து இரண்டு காவலர்களிடமும் 18 மணி நேரம் விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையின் முடிவில் இரண்டு காவலர்கள் மீதும் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். உயர் அதிகாரிகள் மீது புகார் அளிக்க வந்து தற்போது அவர்களே வழக்கில் சிக்கியுள்ளார்கள்.
English Summary
two police arrested by tamilnadu police