பவுர்ணமி கிரிவலம் - 20 அதிநவீன படுக்கை வசதி கொண்ட பேருந்துகள் இயக்கம்.!
twenty ac bus run to thiruvannamalai for girivalam
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பவுர்ணமி கிரிவலம் மிகவும் பிரபலமானது. இதற்காக பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். அவர்களின் வசதிக்காக பல்வேறு பகுதிகளிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
இது குறித்து அரசு விரைவு போக்குவரத்துக்கழகத்தின் மேலாண் இயக்குனர் இளங்கோவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- "திருவண்ணாமலையில் பவுர்ணமி தினத்தில் நடைபெறும் கிரிவலத்தை முன்னிட்டு பயணிகள் திருவண்ணாமலைக்கு சென்றுவர ஏதுவாக சென்னையில் இருந்து அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் மூலம் 20 அதிநவீன இருக்கை, படுக்கை வசதி கொண்ட குளிர்சாதன பேருந்துகள் மற்றும் இருக்கை வசதி கொண்ட குளிர்சாதன பேருந்துகள் 26-ந் தேதியான இன்றுசென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு இயக்கப்பட உள்ளன.
இந்த சிறப்பு பேருந்துகளுக்கு www.tnstc.in, மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் செயலி, உள்ளிட்ட இணையதளங்களின் மூலமாக முன்பதிவு செய்து பயணம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும், பேருந்து இயக்கம் குறித்த தகவலுக்கு 9445014452, 9445014424 உள்ளிட்ட எண்களில் தொடர்பு கொள்ளலாம். ஆகவே, திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் பக்தர்கள் மேற்படி பேருந்து வசதியினை முன்பதிவு செய்து பயன்படுத்திக்கொள்ள இதன் மூலம் கேட்டுக்கொள்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
twenty ac bus run to thiruvannamalai for girivalam