#BREAKING_NEWS திடீரென ஆர்ப்பாட்டம் செய்த தினகரன்! தி.மலையில் பரபரப்பு.!!
திடீரென ஆர்ப்பாட்டம் செய்த தினகரன்! தி.மலையில் பரபரப்பு.!!
பசுமை வழிச்சாலைக்கு எதிராக தற்போது [06.07.2018] அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொது செயலாளர் தினகரன் திருவண்ணாமலையில் ஆர்ப்பாட்டம் செய்து வருகிறார்.
சென்னை, காஞ்சீபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டங்கள் வழியாக 277 கி.மீ. தூரம் அமைய இருக்கும் 08 வழி பசுமை சாலைக்கு மத்திய அரசு ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
இதில், திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு, வந்தவாசி, போளூர், ஆரணி மற்றும் செங்கம் வரையில் 122 கிலோ மீட்டர் தொலைவிற்கு விவசாய நிலங்கள், பாசன கிணறுகள், வீடுகளை கையகப்படுத்த அளவீடு பணி 90 சதவீத பணிகளை காவல்துறையின் உதவியுடன் விவசாயிகளை விரட்டியடித்து விட்டு, அதிகாரிகள் தங்கள் பணியை தொடர்ந்து வருகின்றனர்.
சில தினங்களுக்கு முன், திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே எருமைவெட்டி எனும் கிராமத்தில் நிலம் எடுக்க நிலத்தினை அளந்து, நிலத்தில் அதிகாரிகள் கல்லை நட்டனர். கல்லை பிடிங்கிவிட்டு என் நிலத்தில் இருந்து கிளம்புங்கள் என்று, பன்னிரெண்டாம் வகுப்பு பள்ளி மாணவி அம்மு தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், தற்போது [06.07.2018] திடீரென அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொது செயலாளர் தினகரன் திருவண்ணாமலையில் ஆர்ப்பாட்டம் செய்து வருகிறார். ஆர்ப்பாட்டத்தில் ஆவேசமாக பேசிய அவர், பெங்களூருக்கு சென்னைக்கும் இடையிலான சாலை போக்குவரத்தை விடவா இது முக்கியம் என்றும், உளுந்தூர்பேட்டை, சேலம் இடையிலான சாலையை இன்னும் மேம்படுத்தவில்லை''. என்று பேசினார்.
மேலும், இந்த சாலைக்கு எதிராக யாரும் குரல் கொடுத்தால், அராஜக முறையில் அவர்களை கைது செய்து சிறையில் அடைக்கு போக்கை தமிழக அரசு கைவிட வேண்டும். இந்த அரசு விரைவில் அகற்ற படும் என்றும் தெரிவித்துள்ளார்.
English Summary
TTV DINAKARAN PROTEST AGAINST GREEN WAY ROAD