பொங்கல் திருநாளில் பெருந்துயரம்! முதல்வர் ஸ்டாலின் வேதனை!
TN Govt MK Stalin fund announce Amaravathi river accident
அமராவதி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த மூவருக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் முக ஸ்டாலின், அவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "மதுரை மாவட்டம், ஆலங்குளத்தைச் சேர்ந்த பாக்கியராஜ், சின்ன கருப்பு மற்றும் சிறுவன் ஹரி ஆகிய மூவரும் சுற்றுலா சென்றுவிட்டு தங்கள் ஊருக்கு திரும்பும் வழியில் திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், தாராபுரம் தெற்கு கிராமம், மதுரை நெடுஞ்சாலை அபூர்வா ஹோட்டல் அருகே உள்ள அமராவதி ஆற்றில் புதிய ஆற்றுப் பாலம் அருகே நேற்று மாலை குளிக்கச் சென்றபோது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்கள் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகவும் வேதனையடைந்தேன்.
நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்" என்று முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
English Summary
TN Govt MK Stalin fund announce Amaravathi river accident